புதன், 27 ஆகஸ்ட், 2014

25.நரம்பு வித்திர ஆண்குறி நோய்.


  • திரிதோஷ குற்றத்தால் ஆண்குறி நரம்புகளில் நீர் கோர்க்கும்.
  • குறியை சுற்றிலும் வீக்கம் காணும்.
  • இரத்தம் சிறுநீருடன் கலந்து வெளியேறும்.
  • மேலும் ஆண்குறியில் கட்டிகள் அதிகம் உண்டாகி அதிலிருந்து சீழும் இரத்தமும் வடியும்.
  • நரம்பு வலி சூடு ஏறி அதிகப்படும். 
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

24.தோட பேத ஆண்குறி நோய்.

  • ஆண்குறியில் மிளகு போல் கறுப்பு நிறத்தில் சதை தோன்றும்.
  • வெடித்து துர்நாற்றமுடன் புண்ணுண்டாகும்.
  • கட்டிகள்,கொப்பளங்கள் ஏற்பட்டு சில்விஷம் போன்ற குணங்களை தோற்று விக்கும். 

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

23.சதை வளர்த்தி ஆண்குறி நோய்.


  • நரம்புகளில் மிகுந்த வேதனை தோன்றும்.
  • ஆண்குறியின் முனை மலரை நைய செய்யும்.
  • சருமத்தை பெருக்க செய்யும்.
  • சில் விஷம் உடலில் ஏறுவதை போன்ற குணங்கள் தோன்றும்.
  • நரம்புகள் தளர்ச்சியுறும்.
  • நடக்க இயலாது.
  • ஆண்குறியில் சதை மிக வளர்ந்திருப்பின் இந்நோய் அசாத்தியம் ஆகும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

22.சுர ஆண்குறி நோய்.


  • இரத்தம் பெருகி கசியும்.
  • ஆண்குறியில் தாங்க முடியாத வேதனை உண்டாகும்.
  • குறியின் சருமம் பளபளப்புடன்  பழுத்து நைந்து காணும்.
  • இக் கொடிய நோய் சோபத்தை உருவாக்கும்.
  • ஆண்குறியில் கட்டிகள் அதிகம் தோன்றும்.
  • சுர ஆண்குறி நோய் ஏற்பட்டால் மரணத்தை உண்டு பண்ணும் என்று அறியவும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

21.எரியவு ஆண்குறி நோய்


  • ஆண்குறி துவாரம் பெரிதாகும்.
  • எப்போதும் எரிச்சல் தோன்றுவதோடு சோபதாபம் கொள்வர்.
  • கட்டிகள் அதிகமாகப் புடைத்து வேதனையும்,தணப்பும் உண்டாகும்.
  • சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
  • சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியாகும்.
  • சிறுநீர் அடிக்கடி போகும்.
  • ஆண்குறியும் விம்மும்.
  • இறுதியில் காச நோயில் கொண்டு சேர்க்கும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

20.தம்பன ஆண்குறி நோய்.


  • ஆண்குறி பளபளப்புடன் கடுஞ் சிவப்பு  நிறமாக மாறும்.
  • ஆண்குறி மொக்கில்வேதனை ஏற்படும்.
  • சுக்கிலம் கசியும்.
  • ரண நாற்றம் வீசும்.
  • சில் விஷம் கொண்டதுபோல குறிகள் காணும்.
இதற்கு காந்த ரசவில்லை,நவக்கிரக வெள்ளை போன்ற மருந்துகள் கொடுக்க குணம் காணும்.இந்த மருந்துகள் கொடுத்தும் குணம் காண வில்லை என்றால் அசாத்திய நிலை என்று நிர்ணயப் படுத்தவும்.  

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

19.முள்ளிலாண் குறி நோய்.


  • ஆண்குறியில் கொப்பளங்கள் அதிகம் தோன்றும்.
  • எப்பொழுதும் உடல் அனலாகக் காயும்.
  • கட்டிகள் தோன்றி கோசம் வீக்க முறும்.
  • நீர்த்தாரையில் குத்தல் காணும்.
  • உடல் வேதனை தரும்.
  • இந்நோய் ஏற்பட்டால் தீருவது கடினம்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

18.தோல் தடை ஆண்குறி நோய்,


  • தோல் தடை ஆண்குறி நோய் ஏற்பட்டால் உடல் நைந்து வரும்.
  • ஆண்குறி மலர் வீங்கி,துவாரம் அடைபடும்.
  • இதனால் சிறுநீர் சதா கட்டுப்பட்டு  வேதனை தோன்றும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

17.பிளவை ஆண்குறி நோய்,


  • பித்தமுடன்  வாதமும் கூடி (தொந்தித்து ) ஏற்படும் சிலேற்பனத்தால் ஆண்குறியில் பிளவை தோன்றும்.
  • இந்த நோய் ஏற்பட உடல் தடிக்கும்.சீதளமும் அதிகரிக்கும்.
  • பிளவை ஆண்குறி நோய் கொண்டவர் பகல் தூக்கம் அதிகம் விரும்புவர். 
  • இக்குணங்கள் காணப்படின் பிளவை ஆண்குறி நோய் என்று அறியவும்
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

16.கல்லாண்குறி நோய்,

  • ஆண்குறியில் குழி ஏற்பட்டு அதிலிருந்து இரத்தமும்,சீழும் வெளிவரும்.
  • மலை போல் சிறு வெளியாகும்.
  • கல்போல் வீக்கம்  ஏற்படும்.


இதற்கு மருந்து :வெள்ளி சுண்ணம் :
சுத்தி செய்த வெள்ளி அரப்பொடி எடுத்து,அதன் எடைக்கு அண்ட ஓடு சேர்த்து வெள் எருக்கம்பாலால் அரைத்து உலர்த்தி குகையில் வைத்து ஒரு சாமம் ஊத சுண்ணமாகும்.

இம்மருந்தை அரிசி எடை நெய்யில் கலந்து உண்டு வந்தால் இரத்தம்,சீழ் வடிதல்,சல நீர் பாய்தல்,போன்றவைகள் மாறும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

15.அழிவு ஆண் குறி நோய்

  • ஆண்குறியானது ரணமுடன் கதளி வாழைப் பழம் போல் காணும்.
  • இரணத்திலிருந்து சீழ் பாயும்.
  • எரிச்சலும் உண்டாகும்.
  • உடல் வேதனை யுறும்.
  • சில்விஷம் ஏறினால் போல் தோன்றும்.
  • கட்டிகள் பளபளப்புடன் அதிகம் எழும்.
தாமிர சுண்ணம்:

சுத்திசெய்த தாமிர தகடு 35 கிராம் 

சுத்திசெய்த படிகாரம்  35 கிராம் 

 சுத்திசெய்த வீரம் 35 கிராம்

சுத்திசெய்த சூதம் 35 கிராம்

சுத்திசெய்த வெள்ளை பாஷாணம் 35 கிராம். 
தாமிர தகடை தவிர மற்ற சரக்குகளை பழசாற்றால் அரைத்து தாமிர தகட்டில் பூசி,அதன் மீது சீலைமண் செய்து கெஜ புடம் போடவும்.அது வெட்டையாக இருக்கும்.அந்த எடைக்கு முட்டை தோடும் சேர்த்து,எருக்கம் பால் விட்டு அரைத்து,உலர்த்தி ஒரு குகையிலிட்டு ஊத சுண்ணமாகும்.

இதில் அரிசிஎடை (20 மில்லி கிராம்),எடுத்து பசுவின் நெய்யுடன் கலந்து உண்டு வந்தால் புண் புரைகள்,கிரந்தி,சூலை,முதலியவை  நீங்கப் பெற்று அழிவு ஆண்குறி நோயும் விலகும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

14.விரலாண் குறி நோய்.

விரலாண் குறி நோய் தோன்றினால் 
  • ஆண்குறியில் விரலைப் போலவும்,
  • புல்லாங்குழலைப் போலவும் தடித்து வீங்கிக் காணும்.
  • மேலும் உடல் வேதனையுரும்.அழல்(சூடு )மீறி (அதிகரித்து) வெள்ளை காணும்.
  • உடலும் இரணம் போலாகும். 
இதற்கு மருந்து :              சாதிலிங்க பதங்கம்

சுத்தி செய்த சாதிலிங்கம்                        35 கிராம்  (1 பலம் ),

சுத்தி செய்த வெள்வங்கம்                      35 கிராம்  (1 பலம் ),

சுத்தி செய்த பறங்கிப் பட்டை                70 கிராம்  (2 பலம் ),

சாதிலிங்கம்,வெள்வங்கம் இவைகளை தேன் விட்டு அரைத்து கொள்ளவும்.பின்னர் பறங்கிப் பட்டையை பொடி செய்து சட்டியிலிட்டு அதன் மீது முன் மருந்தை வைத்து மேல் சட்டிக் கொண்டு பொருந்த மூடி வாய்ப் பாகத்தை சீலை மண் செய்து தீ எரிக்கவும். ஆறிய பின்பு சீலை மண்ணைப் பிரித்து எடுத்து பார்த்தால் மேல்சட்டியில் பதங்கம் பிடித்து இருக்கும்.இதை பத்திர படுத்திக் கொள்ளவும்.இதை தேன்,நெய்,வெண்ணெய்,முதலிய அனு பானங்களில் உண்டு வந்தால் தடிப்பு,வீக்கம்,சரும நோய்,அழல்,சூலை,புண்,புரைகள்,போன்றவை நீங்க பெற்று முன் நோயும் தீரும். 

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.





சனி, 26 ஏப்ரல், 2014

13.தாமரைக் காய் ஆண்குறி நோய்

தாமரைக் காய் ஆண்குறி நோய் ஏற்பட்டால் ஆண்குறி தமரைகாய் போல் தடித்து அதில் கொப்பளங்கள் தோன்றி வெடித்து சீழும் இரத்தமும் கலந்து கசியும்.சில் விஷத்தால் விளைந்தது போல் தோற்றமுரும்.கொடுமையான பல நோய்கள் இதனால் உண்டாகும்.


இதற்கு நெய்

  1. ஆலமரப்பட்டை சாறு 360 மில்லி 
  2. நாவல் மரப்பட்டை சாறு 360 மில்லி
  3. உதிய பட்டை சாறு 360 மில்லி
  4. எலுமிச்சை சாறு 360 மில்லி
  5. நெல்லிக்காய் சாறு  360 மில்லி
  6. பசுவின் நெய் 360 மில்லி
  7. நல்லெண்ணெய் 360 மில்லி
  8. கரும்பு சாறு 360 மில்லி
  9. தேங்காய் பால்  360 மில்லி
  10. ஏலம் 35 கிராம் 
  11. சிற்றரத்தை 
  12. சாதிக்காய் 
  13. சாதி பத்திரி 
  14. கிராம்பு 
  15. அதிமதுரம்
10 முதல்  15 சரக்குகளை தனித்தனியே பொடித்து சலித்து மேற்படி சாற்றால் அரைத்து எண்ணெய் நெய்யுடன் கலந்து மெழுகு பதத்தில் காய்ச்சி வைத்து கொண்டு கரண்டி வீதம் காலை  மாலை சாப்பிட்டு வர கொப்பளங்கள்,சீழும் இரத்தமும் கலந்து கசியும் புண்கள் போன்றவை நீங்கும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

12.பிடக ஆண்குறி நோய்

பிடக ஆண்குறி நோய் ஏற்பட்டால் உழுந்து போலவும்,பயறு போலவும்,அதிகமாக கொப்பளங்கள் ஏற்படும்.மேலும் ஆண்குறியை சுற்றி நமைச்சல் ஏற்படும்.சன்னியும் வியர்வையும் ஏற்படும்.

இதற்கு மருந்து கற்பூர பதங்கம் :

பச்சை கற்பூரம்                                    3 பலம் (105 gm )
சுத்தி செய்த கந்தகம்                         2 பலம் (70 gm )
சுத்தி செய்த ரசம்                                2 பலம் (70 gm )
வெள்ளை பாஷாணம்                     1 பலம்   (35 gm )

ரசம்,கெந்தகம் முதலில் நன்கு கருப்பாகும் படி நன்கு அரைத்து,பின்பு வெள்ளை பாஷாணம் சேர்த்து அரைத்து ,பின் பச்சை கற்பூரம் சேர்த்து அரைத்து  பின்பு வெற்றிலை சாறு விட்டு மெழுகு பதம் அரைத்து கொடிவேலி வேர் பட்டையை தண்ணீர் விட்டு நன்றாய் அரைத்து குகை செய்து,அதனுள் முன்பு அரைத்த மருந்தை வைக்கவும்,இக் குகையை ஒரு சட்டிக்குள் வைத்து மேல்சட்டி வைத்து மூடி சீலை மண் 7 செய்து நான்கு சாமம் (12 மணி )தீயை சிறிது சிறிதாக கூட்டி எரிக்கவும்.பின்பு குளிர ஆறியபின் திறந்து பார்த்தல் மேல் சட்டியில் பதங்கம் ஏறி இருக்கும் இதை எடுத்து பசுவின் நெய்யில் கலந்து புண்ணில் தடவவும்.உள்ளுக்கு கொடிவேலி கலந்த மருந்தை சாப்பிட நோய் தீரும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

11.எரிவு ஆண்குறி நோய்.

1.எரிவு ஆண்குறி நோய் ஏற்பட்டால் இரத்தம் கலந்த உஷ்ணம் சிறுநீரில் தோன்றும்.

2.ஆண்குறியில் புண் உண்டாகி எரிவு ஏற்படும்.

3.இன்னும் சிறுசிறு கட்டிகள் தோன்றும்.

4.மயக்கம், 

5.சோபதாபம்,

6.கோழையுடன் இருமல் போன்றவை காணும்.

இன் நோயுடையவர் பிழைப்பது கடினம். 

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

10.மேக ஆண்குறி நோய் :

மேக ஆண்குறி நோய் அடையாளம்:

1.கப ரோகம்,இரத்த ரோகம்,போன்ற நோய்கள் எழும்,
2.குட்டமும்,மேகமும் எழும்.
3.ஆண்குறியில் புண்ணும்,தணப்புடன் சீழும் வடியும்.
4.பொருமலும் உண்டாகும்.

இதற்கு மருந்து :
வங்க பற்பம் 10 நாட்கள் சாப்பிட தீரும்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

9.பித்த இரத்த ஆண்குறி நோய்

பித்த இரத்த ஆண்குறி நோய் அடையாளம் :

ஆண்குறி வீங்கும்,இலந்தை விதை போல் தோற்றமளித்து வெடித்து,மாமிசத்தை பெருக்கி சில்விஷம் போல் நோயை அதிகப்படுத்தும்.

இதற்கு மருந்து:

கல்நார்பற்பம்,முத்து பற்பம்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.


 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

8.சல ரோக ஆண்குறி நோய் :

சல ரோக ஆண்குறி நோய் அடையாளங்கள் :

1.ஆண்குறியில் நீளமகா தடிப்புடன் முளை போன்ற கொப்பளங்கள் அதிகம் உண்டாகும்.
2.அந்த கொப்பளங்களிலிருந்து,சீழும்,இரத்தமும் கலந்து வெளியாகும்.
3.அரிப்புடன் எரிச்சலும் காணும்.
4.உடலில் சீதளம் மிகுந்து காணப்படும்.
5.ரோமத்தில் சிலிர்ப்பு எழும். 

இதற்கு மருந்து :

மிருதார் சிங்கி மெழுகு,சிறு சுண்டக்காய் வீதம் 21 நாட்கள் சாப்பிட தீரும்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

7.சிலேற்பனத்தில் இரத்த ஆண்குறி நோய் .

சிலேற்பனத்தில் இரத்த ஆண்குறி நோய் அடையாளங்கள் :

1.கண்களில் பல நோய்களை உண்டாக்கும்.
2.ஆண்குறியில் கடுகு போல் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு அதில் இரத்தமும்,வியர்வையும்,கலந்து காணப்படும்.
3.காந்தலும் தோன்றும்.
4.சில் விஷம் கொண்டதுபோல் உடல் அரிப்பு எழும்.

இதற்கு மருந்து :

பூர மெழுகு சிறு சுண்டக்காய் வீதம் 20 நாட்கள் சாப்பிட தீரும்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

6.அரிசிக்கல் ஆண்குறி நோய்.


அரிசிக்கல்  ஆண்குறி நோய் அடையாளங்கள் :

1.ஆண்குறியில் பல நோய்களை கிளப்பும்.
2.ஆண்குறியிலும்,உடலிலும்,நமைச்சல் தோன்றும்.
3.மூல நோயை ஏற்படுத்தும்.
4.உடல் பொருமிக் காணப்படும்.
5.வியர்வையுடன் ரத்தம் பொங்கும்.
6.சுக்கிலம் கெட்டுவிடும்.

இதற்கு மருந்து :

சிறுகண் நாகத்தை சிறியா நங்கை செடியின் வேரினால் வெண்நிற பற்பமாக்கி 20 நாட்கள் சாப்பிடவும்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

5.இரத்த ஆண்குறி நோய் :

இரத்த ஆண்குறி நோய் அடையாளம்:

1.ஆண்குறி சிவந்து காணும்.
2.எந்நேரமும் வேதனை தோன்றும்.
3.உடலில் அதிக சுரம் காயும்.
4.தேன் போல் கழிச்சல் மிகுந்து வெளியாகும்.
5.எப்போதும் உடலில் எரிச்சல் இருந்து வரும்.
6.நினைவு தடுமாறி வேதனை அடைவர்.

இதற்கு மருந்து :

தண்ணீர்விட்டான்கிழங்கு ,உத்தாமணி,கருங்கொன்றை மரப்பட்டை,மாசிக்காய்,தேவதாரம்,திரிபலை,இவைகளை பசுவின் பாலில் புடவியல் செய்து உலர்த்தி எடுக்கவும்.கெந்தி சாதிலிங்கம் இரண்டும் சுத்தி செய்து சமனாக அரைத்து வைத்துக்கொண்டு முன் சூரணத்துடன் சேர்த்து சாப்பிட சில நாட்களில் நோய் தீரும்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

4.திரி தோஷ ஆண்குறி நோய்

திரி தோஷ ஆண்குறி நோய் அடையாளம் :

1.ஆண்குறியில் வாதம் தங்கி நாளுக்கு நாள் இரணமுடன் வீக்கம் தோன்றும்.
2.புண் ஏற்பட்டாற்போல் சிவப்பேறிக்காணும்.
3.அதிக வேதனை காண்பதுடன் சீதம் மிக எழும் 
4.விம்மும் தன்மை உடைய நரம்புகள் அடங்கி போகும்.
5.அண்டமும் (விதை கொட்டை )மிக வீங்கும்.

இதற்கு மருந்து :

பூரலிங்க மெழுகு 10 நாட்கள் சாப்பிட
 தீரும்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

3.சிலேத்தும ஆண்குறி.

சிலேத்தும ஆண்குறி  நோய் அடையாளங்கள் :

1.ஆண்குறி தடித்து கனத்து மினு மினுப்புடன் வீங்கி காணும்.
2.விதைப் பைகள் வீக்கத்துடன் காணும்,
3.ஊரல் ,சொறி ஏற்படுவதுடன் இருமல் காணும்.
4.வயிறு பொருமல்,பரு,பிளவை எழும்.
5.உடலில் விஷம் ஏறினால் போல பல குணங்களை காட்டும். 

இதற்கு மருந்து :

கற்பூரகெந்தி மெழுகு 5 நாட்கள் உண்ண தீரும்.
தண்டில் எருக்கன் பாலை பூசி திருகு கள்ளி சோற்றை வைத்து இரவில் கட்ட வேண்டும்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

2.பித்த ஆண்குறி நோய்.

பித்த ஆண்குறி நோய் அடையாளம் :

1.ஆண்குறி சிவந்து காணும்.
2.குறி வீக்கத்துடன்,கடுப்பு,காய்ச்சல் தோன்றும்,
3.உடலுறவில் மிகுந்த ஆசை எழும்,
4.இந்நோய் மாறுவது கடினம்.
மருந்துகள் செய்து கொடுத்தாலும் இந்த  நோய் தீருவது கடினம்.சில் விஷம் போல் உடலில் உணர்வு தோன்றும்.
இதற்கு மருந்து:

வீரம்,பூரம்,கெந்தி,ரச செந்தூரம் இவைகளை வெற்றிலை சாற்றில் அரைத்த குளிகையை 10 to 20 நாட்கள் சாப்பிட தீரும். 

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

1.வாத ஆண்குறி நோய்.

வாத ஆண்குறி நோய் அடையாளம்:

1.ஆண்குறி துவாரம் அடைபட்டு,பலவிதமான வேதனைகள் உண்டாகும்.
2.அரிப்பு,
3.எரிச்சல்,
4.குருகுருப்பு,
5.அழல் (வெப்பம் ),முதலியன தோன்றும்.
6.பருப் போன்று கட்டிகள் உண்டாகும்.
7.விஷக்கடியால் ஏற்பட்ட நோய் போன்று தோன்றும்.
8.உடல் அழகுக் கெட்டு தேகம் நலிந்து மெலிந்துவிடும்.

இதற்கு கற்பூர குழம்பு 3 நாள் சாப்பிட தீரும். 
மருந்து வேண்டின் தொடர்புக்கு -+91  9894618455.

 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

ஆண்குறி நோய்கள்

ஆண்குறி நோய்கள் வரக்காரணம்.
1.வாத -பித்த -சிலேத்தும  தொந்ததினாலும்,
2.பெண்களுடன் மிதமிஞ்சி உடலுறவாலும்,
3.வேசிகளுடன் இன்பம் அனுபவிப்பதாலும்,
4.சல்லாப லீலைகள் செய்வதாலும்,
5.பெரும்பாடு நோய் கொண்ட பெண்களுடன் சேருவதாலும்.
6.சிறு நீரை அடக்கி போகம் கொள்வதாலும்,ஆண்குறி நோய்கள் ஏற்படுகின்றன.


ஆண்குறி நோய்களின் வகைகள்.

1.வாத ஆண்குறி நோய்.
2.பித்த ஆண்குறி நோய்.
3.சிலேற்பன ஆண்குறி நோய்.
4.திரிதோஷ ஆண்குறி நோய்.
5.இரத்த ஆண்குறி நோய்.
6.அரிசிக் கல்  ஆண்குறி நோய்.
7.சிலேற்பன இரத்த ஆண்குறி நோய்.
8.சலரோக  ஆண்குறி நோய்.
9.பித்த இரத்த ஆண்குறி நோய்
10.மேக ஆண்குறி நோய்
11.எரிவு ஆண்குறி நோய்
12.பிடக ஆண்குறி நோய்
13.தாமரை காய் ஆண்குறி நோய்
14.விரலான்குறி ஆண்குறி நோய்
15.அழிவு ஆண்குறி நோய்
16.கலான் குறி நோய்
17.பிளவை ஆண்குறி நோய்
18.தோல் தடை ஆண்குறி நோய்
19.முள்ளிலான் ஆண்குறி நோய்
20.தம்பன ஆண்குறி நோய்
21.எரியவு ஆண்குறி நோய்
22.சுர ஆண்குறி நோய்
23.சதை வளர்த்தி ஆண்குறி நோய்
24.நரம்பு வித்திர ஆண்குறி நோய்
25.தோட பேத ஆண்குறி நோய்.

மொத்தம் 25 வகைகள் உள்ளன.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.