சனி, 26 ஏப்ரல், 2014

13.தாமரைக் காய் ஆண்குறி நோய்

தாமரைக் காய் ஆண்குறி நோய் ஏற்பட்டால் ஆண்குறி தமரைகாய் போல் தடித்து அதில் கொப்பளங்கள் தோன்றி வெடித்து சீழும் இரத்தமும் கலந்து கசியும்.சில் விஷத்தால் விளைந்தது போல் தோற்றமுரும்.கொடுமையான பல நோய்கள் இதனால் உண்டாகும்.


இதற்கு நெய்

  1. ஆலமரப்பட்டை சாறு 360 மில்லி 
  2. நாவல் மரப்பட்டை சாறு 360 மில்லி
  3. உதிய பட்டை சாறு 360 மில்லி
  4. எலுமிச்சை சாறு 360 மில்லி
  5. நெல்லிக்காய் சாறு  360 மில்லி
  6. பசுவின் நெய் 360 மில்லி
  7. நல்லெண்ணெய் 360 மில்லி
  8. கரும்பு சாறு 360 மில்லி
  9. தேங்காய் பால்  360 மில்லி
  10. ஏலம் 35 கிராம் 
  11. சிற்றரத்தை 
  12. சாதிக்காய் 
  13. சாதி பத்திரி 
  14. கிராம்பு 
  15. அதிமதுரம்
10 முதல்  15 சரக்குகளை தனித்தனியே பொடித்து சலித்து மேற்படி சாற்றால் அரைத்து எண்ணெய் நெய்யுடன் கலந்து மெழுகு பதத்தில் காய்ச்சி வைத்து கொண்டு கரண்டி வீதம் காலை  மாலை சாப்பிட்டு வர கொப்பளங்கள்,சீழும் இரத்தமும் கலந்து கசியும் புண்கள் போன்றவை நீங்கும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

12.பிடக ஆண்குறி நோய்

பிடக ஆண்குறி நோய் ஏற்பட்டால் உழுந்து போலவும்,பயறு போலவும்,அதிகமாக கொப்பளங்கள் ஏற்படும்.மேலும் ஆண்குறியை சுற்றி நமைச்சல் ஏற்படும்.சன்னியும் வியர்வையும் ஏற்படும்.

இதற்கு மருந்து கற்பூர பதங்கம் :

பச்சை கற்பூரம்                                    3 பலம் (105 gm )
சுத்தி செய்த கந்தகம்                         2 பலம் (70 gm )
சுத்தி செய்த ரசம்                                2 பலம் (70 gm )
வெள்ளை பாஷாணம்                     1 பலம்   (35 gm )

ரசம்,கெந்தகம் முதலில் நன்கு கருப்பாகும் படி நன்கு அரைத்து,பின்பு வெள்ளை பாஷாணம் சேர்த்து அரைத்து ,பின் பச்சை கற்பூரம் சேர்த்து அரைத்து  பின்பு வெற்றிலை சாறு விட்டு மெழுகு பதம் அரைத்து கொடிவேலி வேர் பட்டையை தண்ணீர் விட்டு நன்றாய் அரைத்து குகை செய்து,அதனுள் முன்பு அரைத்த மருந்தை வைக்கவும்,இக் குகையை ஒரு சட்டிக்குள் வைத்து மேல்சட்டி வைத்து மூடி சீலை மண் 7 செய்து நான்கு சாமம் (12 மணி )தீயை சிறிது சிறிதாக கூட்டி எரிக்கவும்.பின்பு குளிர ஆறியபின் திறந்து பார்த்தல் மேல் சட்டியில் பதங்கம் ஏறி இருக்கும் இதை எடுத்து பசுவின் நெய்யில் கலந்து புண்ணில் தடவவும்.உள்ளுக்கு கொடிவேலி கலந்த மருந்தை சாப்பிட நோய் தீரும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

11.எரிவு ஆண்குறி நோய்.

1.எரிவு ஆண்குறி நோய் ஏற்பட்டால் இரத்தம் கலந்த உஷ்ணம் சிறுநீரில் தோன்றும்.

2.ஆண்குறியில் புண் உண்டாகி எரிவு ஏற்படும்.

3.இன்னும் சிறுசிறு கட்டிகள் தோன்றும்.

4.மயக்கம், 

5.சோபதாபம்,

6.கோழையுடன் இருமல் போன்றவை காணும்.

இன் நோயுடையவர் பிழைப்பது கடினம். 

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.