புதன், 27 ஆகஸ்ட், 2014

25.நரம்பு வித்திர ஆண்குறி நோய்.


  • திரிதோஷ குற்றத்தால் ஆண்குறி நரம்புகளில் நீர் கோர்க்கும்.
  • குறியை சுற்றிலும் வீக்கம் காணும்.
  • இரத்தம் சிறுநீருடன் கலந்து வெளியேறும்.
  • மேலும் ஆண்குறியில் கட்டிகள் அதிகம் உண்டாகி அதிலிருந்து சீழும் இரத்தமும் வடியும்.
  • நரம்பு வலி சூடு ஏறி அதிகப்படும். 
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

24.தோட பேத ஆண்குறி நோய்.

  • ஆண்குறியில் மிளகு போல் கறுப்பு நிறத்தில் சதை தோன்றும்.
  • வெடித்து துர்நாற்றமுடன் புண்ணுண்டாகும்.
  • கட்டிகள்,கொப்பளங்கள் ஏற்பட்டு சில்விஷம் போன்ற குணங்களை தோற்று விக்கும். 

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

23.சதை வளர்த்தி ஆண்குறி நோய்.


  • நரம்புகளில் மிகுந்த வேதனை தோன்றும்.
  • ஆண்குறியின் முனை மலரை நைய செய்யும்.
  • சருமத்தை பெருக்க செய்யும்.
  • சில் விஷம் உடலில் ஏறுவதை போன்ற குணங்கள் தோன்றும்.
  • நரம்புகள் தளர்ச்சியுறும்.
  • நடக்க இயலாது.
  • ஆண்குறியில் சதை மிக வளர்ந்திருப்பின் இந்நோய் அசாத்தியம் ஆகும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

22.சுர ஆண்குறி நோய்.


  • இரத்தம் பெருகி கசியும்.
  • ஆண்குறியில் தாங்க முடியாத வேதனை உண்டாகும்.
  • குறியின் சருமம் பளபளப்புடன்  பழுத்து நைந்து காணும்.
  • இக் கொடிய நோய் சோபத்தை உருவாக்கும்.
  • ஆண்குறியில் கட்டிகள் அதிகம் தோன்றும்.
  • சுர ஆண்குறி நோய் ஏற்பட்டால் மரணத்தை உண்டு பண்ணும் என்று அறியவும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

21.எரியவு ஆண்குறி நோய்


  • ஆண்குறி துவாரம் பெரிதாகும்.
  • எப்போதும் எரிச்சல் தோன்றுவதோடு சோபதாபம் கொள்வர்.
  • கட்டிகள் அதிகமாகப் புடைத்து வேதனையும்,தணப்பும் உண்டாகும்.
  • சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
  • சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியாகும்.
  • சிறுநீர் அடிக்கடி போகும்.
  • ஆண்குறியும் விம்மும்.
  • இறுதியில் காச நோயில் கொண்டு சேர்க்கும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

20.தம்பன ஆண்குறி நோய்.


  • ஆண்குறி பளபளப்புடன் கடுஞ் சிவப்பு  நிறமாக மாறும்.
  • ஆண்குறி மொக்கில்வேதனை ஏற்படும்.
  • சுக்கிலம் கசியும்.
  • ரண நாற்றம் வீசும்.
  • சில் விஷம் கொண்டதுபோல குறிகள் காணும்.
இதற்கு காந்த ரசவில்லை,நவக்கிரக வெள்ளை போன்ற மருந்துகள் கொடுக்க குணம் காணும்.இந்த மருந்துகள் கொடுத்தும் குணம் காண வில்லை என்றால் அசாத்திய நிலை என்று நிர்ணயப் படுத்தவும்.  

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

19.முள்ளிலாண் குறி நோய்.


  • ஆண்குறியில் கொப்பளங்கள் அதிகம் தோன்றும்.
  • எப்பொழுதும் உடல் அனலாகக் காயும்.
  • கட்டிகள் தோன்றி கோசம் வீக்க முறும்.
  • நீர்த்தாரையில் குத்தல் காணும்.
  • உடல் வேதனை தரும்.
  • இந்நோய் ஏற்பட்டால் தீருவது கடினம்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

18.தோல் தடை ஆண்குறி நோய்,


  • தோல் தடை ஆண்குறி நோய் ஏற்பட்டால் உடல் நைந்து வரும்.
  • ஆண்குறி மலர் வீங்கி,துவாரம் அடைபடும்.
  • இதனால் சிறுநீர் சதா கட்டுப்பட்டு  வேதனை தோன்றும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

17.பிளவை ஆண்குறி நோய்,


  • பித்தமுடன்  வாதமும் கூடி (தொந்தித்து ) ஏற்படும் சிலேற்பனத்தால் ஆண்குறியில் பிளவை தோன்றும்.
  • இந்த நோய் ஏற்பட உடல் தடிக்கும்.சீதளமும் அதிகரிக்கும்.
  • பிளவை ஆண்குறி நோய் கொண்டவர் பகல் தூக்கம் அதிகம் விரும்புவர். 
  • இக்குணங்கள் காணப்படின் பிளவை ஆண்குறி நோய் என்று அறியவும்
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

16.கல்லாண்குறி நோய்,

  • ஆண்குறியில் குழி ஏற்பட்டு அதிலிருந்து இரத்தமும்,சீழும் வெளிவரும்.
  • மலை போல் சிறு வெளியாகும்.
  • கல்போல் வீக்கம்  ஏற்படும்.


இதற்கு மருந்து :வெள்ளி சுண்ணம் :
சுத்தி செய்த வெள்ளி அரப்பொடி எடுத்து,அதன் எடைக்கு அண்ட ஓடு சேர்த்து வெள் எருக்கம்பாலால் அரைத்து உலர்த்தி குகையில் வைத்து ஒரு சாமம் ஊத சுண்ணமாகும்.

இம்மருந்தை அரிசி எடை நெய்யில் கலந்து உண்டு வந்தால் இரத்தம்,சீழ் வடிதல்,சல நீர் பாய்தல்,போன்றவைகள் மாறும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

15.அழிவு ஆண் குறி நோய்

  • ஆண்குறியானது ரணமுடன் கதளி வாழைப் பழம் போல் காணும்.
  • இரணத்திலிருந்து சீழ் பாயும்.
  • எரிச்சலும் உண்டாகும்.
  • உடல் வேதனை யுறும்.
  • சில்விஷம் ஏறினால் போல் தோன்றும்.
  • கட்டிகள் பளபளப்புடன் அதிகம் எழும்.
தாமிர சுண்ணம்:

சுத்திசெய்த தாமிர தகடு 35 கிராம் 

சுத்திசெய்த படிகாரம்  35 கிராம் 

 சுத்திசெய்த வீரம் 35 கிராம்

சுத்திசெய்த சூதம் 35 கிராம்

சுத்திசெய்த வெள்ளை பாஷாணம் 35 கிராம். 
தாமிர தகடை தவிர மற்ற சரக்குகளை பழசாற்றால் அரைத்து தாமிர தகட்டில் பூசி,அதன் மீது சீலைமண் செய்து கெஜ புடம் போடவும்.அது வெட்டையாக இருக்கும்.அந்த எடைக்கு முட்டை தோடும் சேர்த்து,எருக்கம் பால் விட்டு அரைத்து,உலர்த்தி ஒரு குகையிலிட்டு ஊத சுண்ணமாகும்.

இதில் அரிசிஎடை (20 மில்லி கிராம்),எடுத்து பசுவின் நெய்யுடன் கலந்து உண்டு வந்தால் புண் புரைகள்,கிரந்தி,சூலை,முதலியவை  நீங்கப் பெற்று அழிவு ஆண்குறி நோயும் விலகும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

14.விரலாண் குறி நோய்.

விரலாண் குறி நோய் தோன்றினால் 
  • ஆண்குறியில் விரலைப் போலவும்,
  • புல்லாங்குழலைப் போலவும் தடித்து வீங்கிக் காணும்.
  • மேலும் உடல் வேதனையுரும்.அழல்(சூடு )மீறி (அதிகரித்து) வெள்ளை காணும்.
  • உடலும் இரணம் போலாகும். 
இதற்கு மருந்து :              சாதிலிங்க பதங்கம்

சுத்தி செய்த சாதிலிங்கம்                        35 கிராம்  (1 பலம் ),

சுத்தி செய்த வெள்வங்கம்                      35 கிராம்  (1 பலம் ),

சுத்தி செய்த பறங்கிப் பட்டை                70 கிராம்  (2 பலம் ),

சாதிலிங்கம்,வெள்வங்கம் இவைகளை தேன் விட்டு அரைத்து கொள்ளவும்.பின்னர் பறங்கிப் பட்டையை பொடி செய்து சட்டியிலிட்டு அதன் மீது முன் மருந்தை வைத்து மேல் சட்டிக் கொண்டு பொருந்த மூடி வாய்ப் பாகத்தை சீலை மண் செய்து தீ எரிக்கவும். ஆறிய பின்பு சீலை மண்ணைப் பிரித்து எடுத்து பார்த்தால் மேல்சட்டியில் பதங்கம் பிடித்து இருக்கும்.இதை பத்திர படுத்திக் கொள்ளவும்.இதை தேன்,நெய்,வெண்ணெய்,முதலிய அனு பானங்களில் உண்டு வந்தால் தடிப்பு,வீக்கம்,சரும நோய்,அழல்,சூலை,புண்,புரைகள்,போன்றவை நீங்க பெற்று முன் நோயும் தீரும். 

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.