திங்கள், 25 ஆகஸ்ட், 2014

15.அழிவு ஆண் குறி நோய்

  • ஆண்குறியானது ரணமுடன் கதளி வாழைப் பழம் போல் காணும்.
  • இரணத்திலிருந்து சீழ் பாயும்.
  • எரிச்சலும் உண்டாகும்.
  • உடல் வேதனை யுறும்.
  • சில்விஷம் ஏறினால் போல் தோன்றும்.
  • கட்டிகள் பளபளப்புடன் அதிகம் எழும்.
தாமிர சுண்ணம்:

சுத்திசெய்த தாமிர தகடு 35 கிராம் 

சுத்திசெய்த படிகாரம்  35 கிராம் 

 சுத்திசெய்த வீரம் 35 கிராம்

சுத்திசெய்த சூதம் 35 கிராம்

சுத்திசெய்த வெள்ளை பாஷாணம் 35 கிராம். 
தாமிர தகடை தவிர மற்ற சரக்குகளை பழசாற்றால் அரைத்து தாமிர தகட்டில் பூசி,அதன் மீது சீலைமண் செய்து கெஜ புடம் போடவும்.அது வெட்டையாக இருக்கும்.அந்த எடைக்கு முட்டை தோடும் சேர்த்து,எருக்கம் பால் விட்டு அரைத்து,உலர்த்தி ஒரு குகையிலிட்டு ஊத சுண்ணமாகும்.

இதில் அரிசிஎடை (20 மில்லி கிராம்),எடுத்து பசுவின் நெய்யுடன் கலந்து உண்டு வந்தால் புண் புரைகள்,கிரந்தி,சூலை,முதலியவை  நீங்கப் பெற்று அழிவு ஆண்குறி நோயும் விலகும்.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக